×

அரையிறுதியில் நாதியா

சென்னை: சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, அர்ஜென்டினா வீராங்கனை நாதியா பொடரோவ்ஸ்கா தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டுடன் (28 வயது, 902வது ரேங்க்) நேற்று மோதிய நாதியா (25 வயது, 298வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் விளையாடியபோது பவுச்சார்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பவுச்சார்டு தடுமாற, அதை நன்கு பயன்படுத்தி புள்ளிகளைக் குவித்த நாதியா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. யூஜெனி - நாதியா மோதிய காலிறுதி ஆட்டத்தை, முன்னாள் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார். 2வது செட்டின்போது கனமழை கொட்டியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.


Tags : Nadia , Nadia in semi-final
× RELATED பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம்...